Tuesday, 31 May 2016

குடிப்பிறப்பு - 2 (நாலடியார் - 142)

குடிப்பிறப்பு - 2



சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்

வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது  - வான்றோயும்

மைதவழ் வெற்ப ! படாஅ பெருஞ்செல்வம்

எய்தியக் கண்ணும் பிறர்க்கு !



சான்றாண்மை        -   மேன்மை 
சாயல்                    -   மென்மை / Dignity
தோயும்                  -   தொடும் / எட்டும் 
மை                        -   மேகம்
தவழ்                      -   உலா 
வெற்ப                    -   சிறுமலை / குன்றுளின்  அரசன் 
படாஅ                    -    காணப்படாத
எய்திய                   -   பெற்ற 


மேகம் உலவும் அளவு வானை தொடும் மலைகளின் அரசனே !
மேன்மை, மென்மை மற்றும் ஒழுக்கம் ஆகிய மூன்றும் மிகவும் உயர்ந்த 
குடியில் பிறந்தவர்க்கு அல்லாமல் -  பெரும் செல்வம் பெற்றாலும் பிறரிடன் காணப்படாது. 


Lord of the hills that reaches the sky & clouds traverse them !
Excellence, dignity & good conduct - the three qualities found in the men of race that touches heaven. The same qualities are not found in others even when they acquire great wealth, 


Monday, 30 May 2016

குடிப்பிறப்பு - 1 (நாலடியார் - 141)

குடிப்பிறப்பு - 1


உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்

குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;

இடுக்கண் டலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புற் கறிக்குமோ மற்று?



உலறி                      -   தேய்ந்த / இத்துப் போன
கொடிப்புல்            -   அருகம்புல்
கறி                            -   உண்ணுதல்
இடுக்கண்               -   இக்கட்டு / துன்பம்
அரிமா                     -    சிங்கம்


பசியால் வாடி துன்புறும் போதும், சிங்கம் அருக்கம் புல்லை உண்ணுமோ ? அதைப்போல, இத்துப் போன ஆடை உடுத்தி, பசியால் உடம்பு வாடி நலிந்த போதும், உயர் குடியில் பிறந்தோர், தங்கள் கொள்கையிலிருந்து விலகுவதில்லை.



Though their clothes may be worn out & their body worn with want, men from noble birth do not leave their principles, even a bit.  Even if hunger torment them, do lions eat the creeping grass?