Sunday, 31 May 2015

மெய்ம்மை - 3

மெய்ம்மை - 3




காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து

மேலாடு மீனிற் பலராவர்; ஏலா

இடரொருவர் உற்றக்கால், - ஈர்ங்குன்ற நாட !

தொடர்புடையேம் என்பார் சிலர் !




காலாடு                       -    சுறுசுறுப்பாக 
கிளைஞர்                    -    உறவினர்
மேலாடு                      -  மேலே சுற்றும்
மீன்                            -  நட்சத்திரங்கள்
ஈரம்                           -  ஈரமான மாலை
குன்ற                         -  குன்று





ஈரமான மலைகள் கொண்ட நாட்டின் அரசனே !
செல்வத்தோடு சுறுசுறுப்பாக இருந்த போது உறவினர்கள் வானத்தின்  மேல் சுற்றும் விண்மீன்கள் போல் பலபேர் இருப்பர். வறுமையோடு உடம்பிற்கு இயலாமல் போனால், சிலரே 'உறவினர்' என்று உரிமை கொள்வார்கள்.




Lord of the dripping hills !! When a man is active with wealth, relatives are countless as shining stars that move in the sky. When poverty and bad health befalls, very few claim close alliance with him.

மெய்ம்மை - 2

மெய்ம்மை - 2




தக்காருந் தக்கவர் அல்லாருந் தந்தீர்மை

எக்காலுங் குன்ற லிலராவர்  - அக்காரம்

யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு.




தக்கார்                  -  தகுந்தவர்
அக்காரம்              -  சீனி
கைக்கும்              -  கசக்கும்
வேம்பு                  -  வேப்பம் 




மதிப்பிக்குரியவர் , மதிக்கத் தகாதவரும் தங்கள் குணத்தில் எப்பொழுதும் குறையாமல் இருப்பர். சர்க்கரையை யார் தின்றாலும் கசக்காது; கசக்குமாம் தேவர்களே வேப்பத்தை தின்றாலும்.




The men of worth & unworthy both never change their nature. Whoever they be that eat it, sugar can never grow bitter; and margosa is bitter even when eaten by gods.




மெய்ம்மை - 1

மெய்ம்மை - 1




இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும் 

வசை அன்று வையத் தியற்கை - நசையழுங்க 

நின்றோடிப் பொய்த்த னிரைதொடீஇச் செய்ந்நன்றி 

கொன்றாரிற் குற்றம் உடைத்து.




இசையா                 -  சாத்தியமில்லா 
வசை                      -  பழிப்பு /  ஏசு 
நசை                       -  ஆசை 
அழுங்க                   -   கெடுதல் 




வரிசையாக வளையல்களை அணிந்தவளே ! 
கொடுக்க முடியாத பொருளை கேட்பவரிடன் "இல்லை" என்று சொல்வது இழிவு ஆகாது - அது உலகில்  இயற்க்கை.  தருகிறேன் என்று சொல்லியும், ஆசை கெடும்படி கொடுக்காமல் ஏமாற்றுவது செய்த நன்றியை மறப்பதற்கு (கொல்வது ) சமம் ஆகும்.




O maid with bangles graced ! Saying 'no' to a person who is asking something that is beyond your means does not disgrace you. That is natural in this world. But to cheat someone by not giving, after agreeing to give, is like 'killing' the benefit received.

Saturday, 30 May 2015

பழவினை - 10

பழவினை -  10




சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா,

உறுகாலத் தூற்றாகா, ஆமிடத்தே யாகும்;

சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால்

இறுகாலத் தென்னை பரிவு?




பிறழ்                     -  vary / மாறுபடு
உறுகாலம்             -  உரிய நேரம்
ஊற்று                    -  support  / ஊன்றுகோல்
பொறி                    -  வினை / (தலை) எழுத்து
பரிவு                      -  வேதனை
இறுகாலம்              -  இறுதி நேரம் (மரண நேரம்)




இளம் வயதில் விதிக்கப்பட்ட  வினை (தலை எழுத்து), சிறிதாகாது, பெரிதாகாது, தொடர் வரிசை மாறி வராது, உரிய நேரம் ஊன்றுகோல் ஆகாது, நிகழவேண்டிய இடத்திலேயே நடக்கும். அதனால், இறுதி காலத்தில் துயரப் படுவது ஏன் ?




The fate assigned to you during your early days - do not diminish, does not increase, do not come out of the sequence, does not support you in need. That which have to befall shall happen, then why do you grieve when death approaches?

பழவினை - 9

பழவினை - 9




ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வெண்டார்மற் றீய, விழைபய னல்லவை;

வேண்டினும், வேண்டாவிடினும், உற்றபால

தீண்டா விடுதல் அரிது.




ஈண்டு                          -  சேர்த்தல்
வையம்                        -  பூமி
விழை                          -   விரும்புதல் 
உற்றபால                     -   நிகழவேண்டியவை 




நீர் சூழ்ந்த உலகத்தில் உள்ள எல்லோரும் எத்தனையும் தீயவற்றை விரும்ப மாட்டார்கள்; நல்லவைகளையே விரும்புவார்கள். 
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நிகழ வேண்டியவைகள் வந்து சேராமல் போவதில்லை.




On the earth surrounded by deep waters, no man desires evil things; they only desire good things.
Yet, whether they desire or not, the things that are assigned to befall them will not leave untouched.

பழவினை - 8

பழவினை - 8



அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்

பழியோடு பட்டவை செய்தல், - வளியோடி

நேய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப !

செய்த வினையான் வரும்.




அறியா                -  அறியாதவர்
பழி                      -   குற்றம் 
வளியோடி           -   சுரவாளி விரைந்து
நெய்த                  -   நீர் தாமரை
நறவு                    -   மணம்
சேர்ப்ப                  -   அரசன் 




சூறாவளி வீசி நீர் மலரிலிருந்து மணம் பரவும் நீண்ட கடல்கரை கொண்ட நாட்டின் அரசனே ! அறியாதவர்கள் அல்ல அவர்கள்; ஆனால்,அறிய வேண்டியவற்றை அறிந்த பின்னும், குற்றம் தரும் செயலை செய்தல், முற்கால செயலின் பயனே !




Lord of the long cool shore, where breezes spread the Lily's fragrance around ! They are not ignorant; in spite of knowing what they should know, if they do deeds that are guilty, its because of deeds of the past.





பழவினை - 7

பழவினை - 7



இடும்பைகூர் நெஞ்சத்தா ரெல்லாருங் காண

நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பம்பூ

அன்னங் கிழிக்கும் அலைகடற் றண்சேர்ப்ப !

முன்னை விளையாய் விடும்.




இடும்பை                         -  வறுமை
உழல்                               -  திரிதல்




அடம்பம்பூவை அன்னங்கள் கிழிக்கும் குளிர்ந்த அலை வீசும் கடல்கொண்ட நாட்டின் அரசனே ! வருத்தும் வறுமையால் மனமுடைந்து, எல்லாரும் காணும்படி நெடுந்தெருவில் திரிந்து பிச்சை எடுப்பது  எல்லாம் முன் நாளில் செய்த தீச்செயலின் பயனே.




Lord of the sea's cool shore, where swans play games by tearing the 'Adambu' flowers ! Due to acute poverty, if some with broken hearts, wander through the long street in sight of all and beg - its due to fruit of bad deeds of olden days.



பழவினை - 6

பழவினை - 6



பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வ தறிதிரேல்  - கல்லாதார்

சேதனம் என்னும்அச் சேறகத் தின்மையால்

கோதென்று கொள்ளாதாங் கூற்று.




பல்                          -  பல
கேள்வி                    -  கதை 
வீயவும்                   -  அழியவும்
அறிதிறேல்              -   அறிந்திருப்பீர்கள்
சேதனம்                  -   அறிவு
செறக                     -   இனிப்பு 
கோதென்று             -   சக்கை என்று
கூற்று                     -    மரணம்




பல நூல்களின் கேள்வி ஞானத்தின் பயனை உணர்ந்தவர்கள் இறப்பதும்,
கல்லாதவர்கள் பல்லாண்டு வாழ்வது பற்றி அறிந்திருப்பீர்கள்.
அறிவு என்னும் இனிப்பு இல்லாததால், வெறும் சக்கை என்று அவர்களை எடுப்பதில்லை மரணம்.




You must have heard - those who have understood the importance of knowledge from books and  folklore die early, but the ignorant live longer. 
Since the ignorant has got no sweetness of  'knowledge', death deems them to be refuse, and take them not.

பழவினை - 5

பழவினை - 5




நினைத்துணையர் ஆகித்தந் தேசுள் ளடக்கிப்

பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;

நினைப்பக் கிடந்த தெவனுண்டா மேலை

வினைப்பய னல்லாற் பிற?




தினை                                    -   millet
தேசு                                       -  ஒளி /மகிமை
உள் அடக்கி                            -  உள்ளே மறைத்து
பனைத்துணையார்                  -  பனை மரம் அளவு 
வைகலும்                               -  நிதமும்
பாடு                                        -  கௌரவம் 
மேலை                                   -  முந்தைய




தினை அளவு சிறுத்து, கண்ணியத்தை உள் அடக்கி நிதமும் கௌரவம் அழிந்து வாழ்வார்கள், ஒரு காலத்தில் பனைமரம் அளவு பெருமையுடன் வாழ்ந்தவர்கள். இவ்வாறு வாழ்வது  முன்கால தீவினையின் பயனே அன்றி வேறு எதுவும் உண்டோ?




Those who lived with dignity as great as palymra trees, buried their luster within them, and lived a life as small as millet seed. If this is not the fruits of deeds of his former days, what other cause can that be?







பழவினை - 4

பழவினை - 4




உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா;

பெற்றபால் அனையவும் அன்னவாம்; மாரி

வறப்பிற் றருவாரும் இல்லை; அதனைக்

சிறப்பிற் றணிப்பாரும் இல்.




உற்றபால            -  நிகழக்கூடியவை
உறுவார்              -  முனிவர்
அனை                 -  எல்லா
வற                     -  வற்றுதல்
சிறப்பு                 -  செழிப்பு
தணி                   -  வற்றுதல்




நடக்க கூடிய விருப்பமற்ற  நிகழ்வுகளை தடுப்பதை முனிவர்களாலும் முடியாது. பெற்ற நன்மைகள் அனைத்தும் அதுபோலவே. மழை பெய்யாவிட்டால், அதனை வரவளைப்போர் யாரும் இல்லை; அதிகமாக பெய்தால் நீரை வற்ற வைப்போரும் யாரும் இல்லை.




Even ascetics cannot stop the predestined ills about to befall. Likewise are the fated gains.
If rains fails, none can bring the rains. If waters get flooded, no one can dry them up.




பழவினை - 3

பழவினை - 3




வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை;

அளந்தன போகம் அவரவ ராற்றான் ;

விளங்காய் திரட்டினார் இல்லைக் களங்கனியைக்

காரெனச் செய்தாரும் இல்.




அள                                  -   அளவு
போகம்                             -   இன்பம்
ஆறு                                 -   வினை
திரட்டினார்                       -   உருண்டையாக
கார்                                  -   கருப்பு 




வளமையுடன் வாழ விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அவரவர்கள் செயல்களின்  பயனாக இன்பம் அளந்து கொடுக்கப்படுகிறது.
விளாங்காயை யாரும் உருண்டை ஆக்கியது இல்லை; களங்காயும் இயற்கையாகவே கருப்பாக உள்ளது, யாரும் கருப்பு நிறம் பூசியது இல்லை.




Who does not wish prosperity in life? All enjoyment is meted out, in measures as per their deeds.
Just like no one made 'Vilaam apple' round, the 'kalam fruit' is also of naturally black color, no one painted it.

பழவினை - 2

பழவினை - 2




உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்

ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி

ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு

நின்றுவீழ்ந் தக்க துடைத்து.




ஒண்                        -  மேன்மை 
உருவும்                   -  அழகு
ஒண்பொருள்           -  செல்வம் தந்த மேன்மை
உட்கும்                   -  மரியாதை
ஒன்றேயும்              -  ஒரு நற்செயலையும் 
உடைத்து                -  கொண்டு 



அழகு, இளமை, மேன்மை தரும் செல்வம் மற்றும் மரியாதை ஓரிடத்தில் நிலைப்பதில்லை என்பதை அறிந்தும், இந்த ஒரு வாழ்வில் ஒரு நற்செயலையும் செய்யாதவன் வாழ்க்கை உடம்பு எடுத்து (மிருகங்கள் போல்) சில காலம் நின்ற பின் அழிந்து விடுவது போன்றது.




Though knowing very well that beauty, youth, wealth that gives distinction & reverence abide not in one stay, if one does not a single virtuous act in this one life, then his life lives with the body (like the animals), and falls with death.

Friday, 29 May 2015

பழவினை - 1

பழவினை - 1



பல்லாவுள் உய்த்து விடினுங் குழக்கன்று

வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடி கொளற்கு.



பல்லாவுள்     -  பல் (பல) + ஆ (பசு) + உள் (நடுவில்)
உய்த்து          -  கலந்து 
குழம்             -  பச்சிளம்



பல பசுக்களுக்கு மத்தியிலே விட்டாலும் பச்சிளம் கன்று தன் தாயை அறிந்து நாடிக் கொள்ளும் வல்லமை கொண்டது. 
அதுபோல், பழைய காலத்து வினையும் அதனை செய்தவனை பிற்காலத்தில் நாடிக் கொள்ளும்.



If send among many cows, the tender calf has unerring skill to seek out his own mother.
Similarly, the deeds of the olden days have power to search him out to whom their fruit pertains in his later days.

ஈகை - 10

ஈகை - 10



கடிப்பிடு கண்மரசங் காத்தோர் கேட்பர் ;

இடித்து முழுங்கியதோர் யோசனையோர் கேட்பார்;

அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்

கொடுத்தார் எனப்படுஞ் சொல்.




கடிப்பிடு                 -   மேளத்தின் சிறு குச்சி 
இடித்து                   -    இடி 




முரசின் நடுவில் குச்சியால் அடிப்பது காத தூரம் வரையில் மக்கள் கேட்பார்கள். மேகத்தின் இடி ஓசையை யோசனை தூரம் வரை மக்கள் கேட்பார்கள். அடுக்கப்பட்ட மூன்று உலகமும் கேட்குமே, 'சான்றோர் கொடுத்தார்' எனப்படும் சொல்.



The sound of the beaten drum can be heard till few meters (kaatham) away; the thunder can be heard till few miles (yojana) away. Three words piled on will hear the words "Excellent men have given to the needy"

ஈகை - 9

ஈகை - 9




இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்

அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க; - முறைப்புதவின்

ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோற்

பைய நிறைத்து விடும்.



இறப்ப                   -    மிகவும்         
என்னா                  -   எண்ணாமல்
முறை                   -  வரிசையாக 
தவின்                   -   கதவு
ஐயம்                    -   பிச்சை 
புகூஉம்                 -   புகும்
தவசி                     -   துறவி
கடிஞை                 -   திருவோடு
பைய                     -   மெதுவாக



கொடுப்பது மிகவும் சிறியது என்று எண்ணாமல், இல்லை என்று சொல்லாமல்,பயனுடைய அறத்தை யாவருக்கும் செய்யுங்கள். வீடு வீடாக சென்று பிச்சை கேட்கும் தவசியின் திருவோடு மெதுவாக நிறைந்து விடும்.




Without saying  'I have very little to give', or 'I have nothing to give', give to all the needy.
Like the begging bowl an ascetic presents from door to door, by small doles it will be filled full.

ஈகை - 8

ஈகை  - 8




எற்றகை மாற்றாமை என்னானுந் தாம்வரையா

னாற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின் -

மலிகடற் றண்சேர்ப்ப !  - மாறீவார்க் கீதல்

பொலிகடன் என்னும் பெயர்த்து.




மாற்று                        -   மறுத்தல் 
என்னானும்                -   எதுவானாலும்
ஆற்றாதார்                 -   ஏழை / (முடியாதவர்கள்)
ஆற்றின்                     -   செய்தால்
மலி                           -   நிறை
மாறீ                          -   பிரதி
பொலிகடன்               -   வட்டிக்கடன் 




நிறைந்த கடலின் குளிர் கரை கொண்ட நாட்டின் அரசனே ! ஏந்திய கைக்கு மறுக்காமல், எதுவானாலும் தான் அளவை வரையறை வைக்காமல், ஏழை மற்றும் உதவியற்றவர்களுக்கு  கொடுப்பது ஆண்களின் கடமை. மற்றவர்களுக்கு கொடுப்பது வட்டிக்கடன் கொடுப்பது ஆகும்.




King of the swelling seas's cool shore ! Saying 'no' to the outstretched hands of the poor and helpless, without setting any limit on Charity, is the duty of every man. Giving to all others is usury.


ஈகை - 7

ஈகை - 7



பெயற்பான் மழைபெய்யாக் கண்ணும் உலகஞ்

செயற்பால செய்யா விடினுங்; - கயற்புலால்

புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப ! -

என்னை உலகுய்யும் ஆறு ?




பெயர்பான்                     -   பெய்யவேண்டிய  
கயல்                             -   கயல் மீன்       
புலால்                           -   நாற்றம்
கடியும்                          -    போக்கும் 
பொருகடற்                    -   அலை மோதும் 
ஆறு                              -   வகை
தண்                               -   குளிர்ந்த 




கயல் மீன்களின்  நாற்றத்தை புன்னை மணத்தால் போக்கும் அலை மோதும் கரைகள் கொண்ட நாட்டின் அரசனே ! பெய்யவேண்டிய மழை பெய்யாதபோதும், உலகில் உள்ளவர்கள் செய்யவேண்டிய உதவியை மற்றவர்களுக்கு செய்யாவிட்டால், எந்த வகையில் உலகம் தப்பிக்கும்?




King of the land in whose cool shore the stinking fish is washed away by the smell of  'punnai' flowers !!
Even when the rains fail during rainy season, if those in the world do the needful to help those in need, how will the world survive?




ஈகை - 6

ஈகை - 6




நடுஊருள் வேதிகைக் சுற்றுக்கோட் புக்க

படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்;

குடி கொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றுப் பனை.




வேதிகை                       -  பலிபீடம் 
சுற்றுங்கோட்                 -  வேலி 
படுபனை                       -  வளமான பனை
அன்னா                          -  அவ்வாறு
பலர்நச்ச                        -  பலர் விரும்ப
குடி                                -  குடும்பம்
கொழு                            -  ஆடம்பர





பலர் விரும்பும்படி வாழ்வோர், நடு ஊருக்குள் பலபீடம் சுற்றிலும் கட்டப்பட்ட  வேலிக்குள் இருக்கும் பயன்  தரும் பனைமரம் போன்றது.
குடும்பம் செழிப்புடன் வாழும் போதும், தானம் கொடுத்து உண்ணாதவர்கள் சுடுகாட்டில் பிணங்களை எரிக்க பயன்படும் பட்டுப் போன பனைமரம் போன்றது.



Those who live their life as desired by many,  are like the fertile palm safety enclosed alongside the alter in the middle of the village.
Those who do not give before they eat, even when they live luxuriously, are like the sterile palm used in the burial ground.


ஈகை - 5

ஈகை - 5



மறுமையும் இம்மையு நோக்கி ஒருவற்

குறுமா றியைவ கொடுத்தல்; - வறுமையால்

ஈதல் இசையா தெனினும் இரவாமை

ஈதல் இரட்டி உறும்.




உறும்ஆறு               -  பொருந்திய வழி
இசையா                  -   பொருந்தாத 




மறுமையும், இம்மையும் நோக்கி ஒருவருக்கு  உற்ற வழி முடிந்த அளவு இல்லாதோருக்கு கொடுத்தலே. வறுமை காரணமாக கொடுக்க முடியா விட்டாலும், பிறரிடம் பிச்சை எடுக்காமல் வாழ்வது இரண்டு மடங்கு சிறந்தது.




The right path in this world, and to the other world, is to give to the needy to the best of your ability.
If, due to poverty, you are not able to give, at least not begging is twice as meritorious as giving.

ஈகை - 4

ஈகை - 4




இம்மி அரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுதுண்மின் ! - உம்மைக்

கொடாஅ தவர்என்பர் குண்டுநீர் வையத்

தடாஅ அடுப்பி னவர்.




வைகல்                -   தினந்தோறும்
நும்மில்                -   உங்களில்
இயைவ                -   முடிந்தவரை
உம்மை                -   மறு உலகில்
குண்டுநீர்              -   நீர் சூழ்ந்த
வையம்                -   உலகம்
அடாஅ                  -   சமைக்கப்படாத




இம்மி அளவு அரிசி ஆனாலும், நிதமும் உங்களால் இயன்ற அளவு கொடுத்தபின் உண்ணுங்கள்.  மறு உலகில், நீர் சூழ்ந்த இந்த உலகில், கொடுக்காதவர்கள் சமைக்க படாத அடுப்பு பெற்றவர்கள் .




Even if you give a fraction of a grain of rice, daily to the best of your ability eat after you give to the needy. In the other world, if you give not in this world surrounded by deep waters, nothing can be cooked in your hearth.



ஈகை - 3

ஈகை - 3



நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்,

கொடுத்துத்தான் றுய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

மிடுக்குற்றுப் பற்றினு' நில்லாது செல்வம்,

விடுக்கும் வினை உலந்தக் கால்.




நடுக்குற்றும்                 -  வறுமை
தற்                                -  தன்னை
துய்                               -  மகிழ்
ஈண்டு                           -  (பொருள்) சேர்வது
மிடுக்குற்று                   -   இறுக்கி பற்றுதல்
உல                               -   அழி / காய்தல்
விடுக்கும்                      -   விட்டு போவது
வினை                          -   போகூழ் / 




வறுமைக்கு பயந்து தன்னிடம் வருவோரின் துன்பத்தை போக்காதவர், கொடுத்து மகிழ்ந்தாலும் செல்வம் சேரும் நேரத்தில் தான் சேரும்.
இறுக்கிப்  பற்றிக் கொண்டாலும் நில்லாது செல்வம், நாம் உதவி செய்ததின் வினை உலர்ந்துப்  போனால்.




Fearing poverty some do not help those who approach him for help. Yet if he gives happily, his wealth will grow only in its time. Even if you hold on fast to your wealth , it will not stay if the fruits of your early charity dries up.



Thursday, 28 May 2015

ஈகை - 2

ஈகை - 2



முன்னரே சாநாண் முனிதக்க மூயுள ;

பின்னரும் பீடழிக்கு நோய் உள ; கொன்னே

பரவன்மின் ! பற்றன்மின் ! பாத்துண்மின் ! யாதுங்

கரவன்மின் ! கைத்துண்டாம் போழ்து !




சாநாள்                    -   மரண நாள்
மூ                           -   மூப்பு
முனி                       -   வெறுப்பு
கொன்னே                -  வீணாக
பர                           -  புகழ்
பற்றன்                    -   அபகரித்தல் / பெறுதல்
பாத்து                     -    பகுத்து
கர                          -    ஒளி / மறைத்தல்
கைத்து                   -   கைப்பொருள் / சொத்து 




உங்கள்   முன் மரண  நாளும், வெறுக்கதக்க மூப்பும் உள்ளது.
பின்னே, பெருமையை அழிக்கும் நோயும் உள்ளது.
வீணாக, பொருளை பெருக்காதீர்கள் ! பொருளை பற்றிக் கொள்ளாதிருங்கள் ! பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள் ! கையில் கொண்ட பொழுது  பொருள் எதையும் ஒளிக்காதீர்கள் !




Before you are death's day and detestable senility; behind is diseases that humble pride.
Hence, do not waster your days in increasing your wealth, clinging on to your wealth. Eat, after sharing food; while wealth is in your hands, do not hide any of them !!

ஈகை - 1

ஈகை - 1




இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ள இடம்போற் பெரிதுவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்

கடையாவாம் ஆண்டைக் கதவு.




இடம்                     -   நேரம்
பெரி                       -   பெரிதாக 
உவந்து                  -    மகிழ்ந்து 
இயைந்த                -   முடிந்த அளவு
கடையாவாம்          -   மூடப்படவில்லை
ஆண்டை                -    சொர்க்கம்




இல்லாத போதும் முடிந்த அளவினால், பொருள் உள்ளபோது செய்ததுபோல், மிகவும் மகிழ்ந்து, இயல்பாக கொடுக்கும் குணத்தொடு ஒன்றுபட்ட மனிதர்களுக்கு சொர்க்கத்தில் உள்ள கதவுகள் ஒருபோதும் மூடுவதில்லை.




Even during adversity, if one gives as per their ability with great happiness, as during the times of their prosperity, the gates of heaven for them is never closed.

பிறர்மனை நயவாமை - 10

பிறர்மனை நயவாமை - 10




ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு

நீருட் குளித்தும் உயலாகும்; - நீருள்

குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி

ஒளிப்பினுங் காமஞ் சுடும்.




உருகெழு                    -   வெப்பம் மிகுந்த
செந்தீ                          -    சிவந்த தீ
ஒளி                            -     மறை 




ஊருக்குள் எழுந்த வெப்பம் மிகுந்த சிவந்த நெருப்பிலிருந்து 
தண்ணீரில் குளித்து தப்பித்துக் கொள்ளலாம். தண்ணீரில் குளித்தாலும் 
காமம் சுடும், குன்று மேல் ஏறி ஒளித்துக் கொண்டாலும் காமம் சுடும்.



From the fire that fiercely rises in the village, you can escape by bathing in water. Though you bathe in water, lust will burn; and even if you climb the hill to hide yourself  there, still lust will burn.

பிறர்மனை நயவாமை - 9

பிறர்மனை நயவாமை - 9




அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்

வெம்பிச் சுடினும் புரஞ்சுடும்;  - வெம்பிக்

கவற்றி மனத்தைச் சுடுதலாற் காமம்

அவற்றினும் அஞ்சப் படும்.




அழல்               -      நெருப்பு
அவிர்கதிர்        -      சுடர்  கதிர்கள்
கவற்றி             -     கவலைப் படுத்தி
வெம்பி             -     கொதித்து 




அம்பும், நெருப்பும், சூரியனின் சுடரொளி கதிர்களும் கொதித்து சுட்டாலும் உடம்பின் மேல் மட்டுமே சுடும். ஆனால், நெஞ்சினுள் கொதித்து, கவலைப்படுத்தி, மனதை சுடுவதால் காமம் அவற்றைக் காட்டிலும் அதிகமாக அஞ்சப் படும்.





Arrow, fire and sun's glittering rays may rage and burn, but these burn the man's outer body alone. Lust rages and distracts and burns the mind, and is more to be feared than they.


பிறர்மனை நயவாமை - 8

பிறர்மனை நயவாமை - 8




பரவா வெளிப்படா பல்லோர்கட் டங்கா

உரவோர்கட் காமநோய், ஓஓ கொடிதே !

விரவாரு ணாணும் படல் அஞ்சி யாதும்

உரையாதுள் ளாறி விடும்.




விரவாரு     - எதிரிகள் 



கொடியதே காமநோய் !! அந்த நோய் மன வலிமை உடையவர்களிடம் வளராது, பலரிடம்  வெளிப்படாது, மற்ற மனிதர்களிடம் தங்காது.
எதிரிகளிடம்  வெட்கப்பட வைப்பதற்கு அஞ்சி, யாரிடமும் பேசாமல்,
மனதின் உள்ளேயே ஆறி விடும்.




The disease of lust is alarming !! In men with strong resistance, lust does not grow, is not revealed, and does not dwell among few.
In fear of embarrassment among enemies, they say nothing about it and it is extinguished within them.


பிறர்மனை நயவாமை - 7

பிறர்மனை நயவாமை - 7





அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ

வம்பலன் பெண்மரீஇ  மைந்துற்று  - நம்பும்

நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு பாம்பின்

தலைநக்கி அன்ன துடைத்து.





அம்பல்            --   பழிமொழி / அவதூறு / அவமானம்
அயல்               -    சுற்றத்தார் / neighbour
தமர்                  -     உறவினர்
பரீஇ                 -     துக்கப் படுதல்
வம்பலன்          -    சுற்றத்தார்
மரீஇ                -     பலவந்தப்படுத்த
மைந்துற்று       -     மயங்கி
நிலை               -    கட்டுக்கோப்பு
உப்பு                 -    ஒப்பு
உடைத்து          -    சமம் 




அண்டை வீட்டு பெண்ணில் மயங்கி மாசுபடுத்தியவனின் 
சுற்றத்தோர் அவதூறு கூற, உறவினர்கள் அச்சத்தால் துக்கப்பட்டார்கள்.
நம்பும் ஒழுக்கம் இல்லாத மனது உடையவன், பாம்பின் தலையை நக்குவதில் மகிழ்ச்சி காண்பது போன்றது.



Infatuated by his neighbor's wife, a man entered her house & defiles her. As a result, his neighbors spread abroad his guilt & his relatives got scared and mourned. 
Such virtue less men of infirm mind are like those who take pleasure in licking a snake's head.

பிறர்மனை நயவாமை - 6

பிறர்மனை நயவாமை - 6




பல்லார் அறியப் பறைஅறைந்து நாட்கேட்டுக்

கல்யாணஞ் செய்து கடிப்புக்க - மெல்லியல்

காதன் மனையாளும் இல்லாளா என்னொருவன்

ஏதின் மனையாளை நோக்கு?




கடிபுக்க                                -   கல்யாணம் 
நாட்கேட்டு                           -   மங்களகரமான நாள் 
மெல்லியல்                          -   மெலிதான இயல்பு 
காதன்                                  -   ஆசை / விருப்பும் 
ஏதின் மனையாளை              -   அண்டை வீட்டு 




பலர் அறிய மேளம் அடித்து, மங்களகரமான நாள் குறித்து, திருமணத்தில் பந்தம் கொள்ள  - மெல்லிய மனது படைத்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, எதனால் ஒருவன் பிற மனிதனின் மனைவியை நோக்குகிறான்?




With many people's knowledge a man chooses an auspicious day to marry with sounding of drums.
While his wife with a tender heart loves him, whom he espoused, why would he glance at another man's wife?


பிறர்மனை நயவாமை - 5

பிறர்மனை நயவாமை - 5




செம்மைஒன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்

கொம்மை வரிமுலையா டோண்மரீஇ -  உம்மை

வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே இம்மை

அலியாகி ஆடிஉண் பார்.




செம்மை           -  நேர்மை 
வரி                   -  புள்ளி
கொம்மை         -  உருண்டை 
முலை              -   மார்பகம்
மரீஇ                -  மருவி; defile
உம்மை            -  மறுமை;
மனை               - மனைவி




நேர்மை என்பது இல்லாமல், சிற்றினம் சேர்ந்து, அழகிய பெருகிய மார்பகங்களை கொண்டவளுடன் சேர்ந்து, முற்பிறவியில், வன்முறையால் பிறன் வீட்டிற்கு சென்றவர்களே , இப்பிறவியில் நீ அலி ஆகி கூத்தாடி உண்டு வாழ்வார்கள்.




In the former birth, without any regard to righteousness, if you mingled with mean men, and enjoyed intercourse with beautiful women with round breasts, and violently approached other's men's wife - in this birth you will become eunuch and you shall earn your bread by dancing.

பிறர்மனை நயவாமை - 4

பிறர்மனை நயவாமை - 4




காணிற் குடிப்பழிஆங், கைஉ றீற்  கால்குறையும்,

மாணின்மை செய்யுங்கால் அச்சம் ஆம்; நீணிரயத்

துன்பம் பயக்குமாற் றுச்சாரி, நீகண்ட

இன்பம் எனக்கெனைத்தாற் கூறு !




குடி                           -  குடும்பம்
நிரயம்                       -  நரகம்
துச்சாரி                     -  விபச்சாரி 




பிறர் கண்டால் முழு குடும்பமே பழிப்புக்கு ஆளாகும்; கையில் அகப்பட்டால் காலை வெட்டிவிடுவார்கள். ஆன்மையற்ற செயலால் அச்சம் உண்டாகும்.
நீ செய்யும் செயல் நரகத்தில் துன்பம் தரும். ஓ ஒழுக்கம் கெட்டவனே !! (பிறன் மனைவியுடன் உடலுறவு கொள்வதில்) நீ கண்ட இன்பன் தான் என்ன என்பதை சொல் !




If anyone sees, your family will be disgraced; If caught red-handed your limbs would be maimed.
Doing this shameless deed would inflict fear in you & lead to affliction in hell.
Tell me, O profligate, what sort of pleasure is there in having sex with other man's wife?