Thursday, 28 May 2015

பிறர்மனை நயவாமை - 4

பிறர்மனை நயவாமை - 4




காணிற் குடிப்பழிஆங், கைஉ றீற்  கால்குறையும்,

மாணின்மை செய்யுங்கால் அச்சம் ஆம்; நீணிரயத்

துன்பம் பயக்குமாற் றுச்சாரி, நீகண்ட

இன்பம் எனக்கெனைத்தாற் கூறு !




குடி                           -  குடும்பம்
நிரயம்                       -  நரகம்
துச்சாரி                     -  விபச்சாரி 




பிறர் கண்டால் முழு குடும்பமே பழிப்புக்கு ஆளாகும்; கையில் அகப்பட்டால் காலை வெட்டிவிடுவார்கள். ஆன்மையற்ற செயலால் அச்சம் உண்டாகும்.
நீ செய்யும் செயல் நரகத்தில் துன்பம் தரும். ஓ ஒழுக்கம் கெட்டவனே !! (பிறன் மனைவியுடன் உடலுறவு கொள்வதில்) நீ கண்ட இன்பன் தான் என்ன என்பதை சொல் !




If anyone sees, your family will be disgraced; If caught red-handed your limbs would be maimed.
Doing this shameless deed would inflict fear in you & lead to affliction in hell.
Tell me, O profligate, what sort of pleasure is there in having sex with other man's wife?

No comments:

Post a Comment