Friday, 22 May 2015

பொறையுடைமை - 1

பொறையுடைமை  - 1




கோதை அருவிக் குளிர்வரை நன்னாட !

பேதையோ டியாதும் உரையற்க; - பேதை

உரைப்பிற் சிதைத்துரைக்கும்; ஒல்லும் வகையான்

வழுக்கிக் கழிதலே நன்று.





கோதை              -   பூமாலை 
வரை                  -    மலை 
நன்னாட            -   நல்ல அரசனே 
பேதை               -   மூடர்கள் 
உரையற்க         -   பேசாதிருங்கள்
சிதைத்து           -    மாற்றி
ஒல்லும்            -     எல்லா வகையிலும் 
வழுக்கி             -    நழுவி 




குளிர்ந்த மலையிலிருந்து பூமாலை விழும் அருவிக் கொண்ட நல்ல நாட்டின் அரசனே !
மூடர்களுடன் உரையாடல் செய்யாதிருங்கள். மூடனிடம் பேசினால், அதை மாற்றி பதில் கூறுவான். எந்த விதமும் அவனிடமிருந்து நழுவிச் செல்லுதலே நல்லது.





Lord of the pleasant land, where from cool mountains the steams fall as garlands !
Do not converse with fools. If you converse, he would reply after perverting your words.
Would be good to slip away from him in any way possible.












No comments:

Post a Comment