Saturday, 27 December 2014

தூய்தன்மை - 6

தூய்தன்மை - 6




குடருங் கொழுவுங் குருதியும் என்பும்

தொடரு நரம்பொடு தோலும்  - இடையிடையே

வைத்த தடியும் வழும்பும்ஆம் ; மற்றிவற்றுள்

எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள் ?




குடருங்            -  குடலும்
கொழு              -  மூளை
குருதி               -   இரத்தம்
தொடரும்         -   இணைக்கும்
என்பும்             -   எலும்பு
தடி                   -   சதை
வழும்பு            -   கொழுப்பு
எத்திறம்           -    எந்த வகை
ஈரம்                 -    ஈரமான
கோதை            -    பூமாலை




குடல், மூளை, இரத்தம், இலும்பு  இவைகளை இணைக்கும் நரம்புகளும் தோலும்; இடையிடையே வைத்த சதையும் கொழுப்பும் கொண்டதல்லவா  உடம்பு? இதில் எந்த வகையானவள் ஈரப் பூச்சூட்டிக்கொள்பவள் ?




Our body contains intestines, brains, blood, bones & nerves that connect these & skin - and here and there fat & flesh interposed. In such a body, what sort of being is she who insist on adorning herself with fresh garlands?



தூய்தன்மை - 5

தூய்தன்மை - 5




முல்லை முகைமுறுவன் முத்தென் றிவைபிதற்றுங்

கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவனோ?

எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க

பல்லென்பு கண்டொழுகு வேன் .




முல்லை                -   jasmine 
முகை                    -  அரும்பு 
முறுவன்                 -   முறுவல் / பல் 
கல்லா                    -    படிப்பறிவு இல்லாதோர் 
புன்மாக்கள்             -    இழி மக்கள் / mean people 
கவற்ற                    -    கவலைபடுத்த 
புறங்காட்டு             -    சுடுகாட்டு 
உதிர்                       -    பிரிந்து  
உக்க                       -    விழுதல்
பல்லென்பு              -    பல் + என்பு (எலும்பு)
ஒழுகுவேன்            -    ஒழுக்கத்துடன் நடப்பேன் 



"அவளது பற்கள் முல்லை அரும்பு போன்றது!" , "அவளது பற்கள் முத்துக்கள் !" - என்று பிதற்றும் படிப்பறிவு இல்லாத கீழ் மக்கள் என்னை திசை திருப்ப விடுவேனோ?
எல்லோரும் காணும்படி  சுடுகாட்டில் விழுந்த பற்கள் மற்றும் எலும்புக்களை கண்டவன் ஆதலால், நான் ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்வேன் ! 




Though uneducated worthless men rave about her teeth as " jasmine buds" or "pearls", shall I allow them to distract me?
As one among many who see in the cremation grounds the fallen teeth & bones strewn around, I will behave myself.







Friday, 26 December 2014

தூய்தன்மை - 4

தூய்தன்மை - 4




தெண்ணீர்க் குவளை பெரு கயல் வேல்'  என்று

கண்ணில் புன்மாக்கள் கவற்ற விடுவனோ,

உண்ணீர் களைந்தக்கா னுங்குசூன் றிட்டன்ன

கண்ணீர்மை கண்டொழுகு வேன்.





சூல்                                 -   தோண்டி எடு; சூப்பு
புன் மாக்                          -   இழி மக்கள்
ஒழுகுவேன்                    -    செல்வேன்
தெண்ணீர்                       -    தெள் நீர் ; தெளிவான நீர்
கயல்                              -    கெண்டை மீன்
குவளை                         -    குவலயம் ; நீர் தாமரை



"தெளிந்த நீரின் தாமரை அவளது கண்கள்!",  "கெண்டை மீன் போல் கண்கள் உடையவள்!",  "வேல் போன்ற கண்கள் அவளது!" என்று கீழ் மக்கள் கூறுவதை கேட்டு, என் கண்களால் கவருவேனோ ??
நீரை எடுத்து நுங்கை தோண்டி எடுத்து வீசியதைக் கண்டவனைப் போல் நான் என் வழி தவறாமல் செல்லுவேன்.





Shall I become blind to my purpose by the mean people who try to distract me saying, "That woman's eye is like water-lily in clear stream!", "Her eyes are beautiful like fish!", "Her eyes are sharp as javelin!" ?
Having seen that eye's real nature is like the "Nungu" of palm tree scooped out, after the water is drained out, I will go my way without being distracted.


தூய்தன்மை -3

தூய்தன்மை -3




தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூட்டிப்

பொய்க்கொலஞ் செய்ய ஒழியுமே - எக்காலும்

உண்டி வினையுள் உறைக்கும் எனப் பெரியோர்

கண்டுகை விட்ட மயல் .



கோலம்        -    அலங்காரம் 
மயல்           -    சரீரம்;
உண்டி          -    உணவு
வினையுள்   -   வினையால்
உறைக்கும்   -   நாற்றமடிக்கும் 



வாயில் வெற்றிலை பாக்கு மென்று, தலைநிறையப் பூச்சூட்டி மற்றும் பொய் அலங்காரத்தால் - எப்பொழுதும் உண்பதால் உடம்பிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்க முடியாது. இதை அறிந்த பெரியோர் உடம்பை கைவிட்டனர்.




By chewing paan, wearing flower on head & adorning body with expensive clothes you cannot stop the foul smell reeking out of the body from excessive consumption of food. Knowing this, the learned men abandoned the body.




தூய்தன்மை - 2

தூய்தன்மை - 2




தோற் போர்வை மேலுந் தொளை பலவாய்ப் பொய்மறைக்கும்

மீப்போர்வை மாட்சித் துடம்பானால்  - மீப்போர்வை

பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்

பைம்மறியாப் பார்க்கப் படும்.




தொளை                             -   துவாரம் 
புகலாது                              -   பேசாமல் 
மீப்போர்வை                      -   மேல் போர்வை 
பைம்மறி                            -    பைக்குள்; மறி = குட்டி (கரு)




தோல் என்னும் போர்வையால் மறைத்த உடம்பில், பல துவாரங்கள் கொண்ட  அழுக்கை  மறைக்கிறது  நம் உடம்பு. மேல் போர்வையால் உள்ளிருக்கும் அழுக்கானவைகளை மறைக்காமலும், காம வார்தைகள் புகலாமலும் நம் உடம்பை ஒரு வளர்ச்சி பெறாத கருவைப் போல் பார்க்கவேண்டும்.




Though our body is covered with skin, it covers many apertures inside the ugly body. Since, the beauty is owed only to the outward skin that cover the false body, no words of lustful desire should enter our body. Our body should be seen as an under developed embryo.














Friday, 19 December 2014

தூய்தன்மை - 1

தூய்தன்மை - 1




மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர்

நொக்கார்கொ னொய்யதோர் புக்கிலை?  - யாக்கைக்கோர்

ஈச்சிறகன்னதோர் தோல் அறினும், வேண்டுமே

காக்கை கடிவதோர் கோல் .



மா                             -  மாம்பழம்
கேழ்                          -  நிறம்
மடம்                         -  மடமை
புக்கில்                      -  வீடு
நொய்யது                 -  transcendent
கோல்                       -  தண்டு
காக்கை                    -  காகம்
கடி                            -  scare  away
அறினும்                  -  அறுத்தல்


"ஓ ! மாநிற மடந்தையே, நல்ல அழகியே" என்று போற்றும் பெரியவர்கள், காண்பதில்லையோ அப்பெண்ணின் தாழ்ந்த உடம்பின் இயல்பை?
அவ்வுடம்பில், ஓர் ஈயின் சிறகைப் போன்ற சிறு அளவு  தோல் அறுபட்டாலும், காக்கையை துரத்தும்  கோல் வேண்டுமே !!



Those men who rave about a maiden saying "O ! fair & good looking woman!", do they not know how dirty & low body life is housed in ? 
If the skin be cut as slight as a house-fly's wing, you may need a stick that drives away the crows.


அறன் வலியுறுத்தல் - 10

அறன் வலியுறுத்தல் - 10




மான அருங்கல நீக்கி இரவென்னும்

ஈன இளிவினால் வாழ்வேன்மன்; - ஈனத்தால்

ஊட்டியக் கண்ணும் உறுதி  சேர்ந் திவ்வுடம்பு

நீட்டித்து நிற்கும் எனின் !!



மான                          -  மானம் 
அரும்                         -  அரிய 
கல                               -  அணிகலம் / ஆபாரணம் 
இரவு                          -  யாசகம்
ஈனம்                         -   = இன்மை ; கனவீனம்/ dishonour 
இளி                            -  இழிவு







மானம் என்னும் அரிய அணிகலனை நீக்கி, யாசகம் என்னும் கனவீன இழிவினால் வாழ்வேன் - கனவீனத்தால் உண்டு உறுதியோடு இவ்வுடம்பு நீடித்து வாழும் என்றால் !!





Parting with honor's rare jewel, I might still consent to live a supplicant's life of shame, if when I eat with such disgrace, this body could maintain its strength and last for very long days !!









அறன் வலியுறுத்தல் - 9

அறன் வலியுறுத்தல் - 9




வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்;

வைகலும் வைகலை வைகும், என் ரின்புறுவர்;

வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்.




வைகல்                        -  நாள்தோறும்
வைகுதல்                    -  நின்றுவிடல்
வைகும்                        -  நிறுத்தும் 




நாள்தோறும் நாட்கள் வரக்கண்டும், நாள்தோறும் நாட்கள் முடிகின்றன என்று  உணராமல் இன்புறுவர், நாள்தோறும் காலையில் நம்  வாழ்நாட்கள் குறைகிறது என்று உணராதவர்கள்.




Daily those who see the passing day, enjoy the days as if  days are not reduced. 
Daily with every dawn, they do not realise that days are cut from their days allotted.

அறன் வலியுறுத்தல் - 8

அறன் வலியுறுத்தல் - 8




உறக்குஞ் துணையதோர் ஆலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந் தாஅங்  - கறப்பயனுந்

தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும்.




உறக்கு                      - கிள்ளு 
ஈண்டு                        - வளர் /கூட்டு/ பெருக்கு
இறப்ப                        -  அதிகமாக
தக்கார்                       -  பொருந்திய
அறப்பயன்               -   அறமின் பயன்





(விரலால்) கிள்ளி எடுக்கும் அளவு  ஆலம் வித்து மிக சிறிதாக இருந்தாலும், பெரிய மரமாய்  வளர்ந்து நிழல் தருவது போல், உதவியின்  அளவு சிறிதாக இருந்தாலும், பெற தகுந்தவர் கையில் சேர்ந்ததால், அது வானை விட பெரியதாகி விடும்.





The banyan seed, though it be a very small in size, it grows to be a mighty tree that gives ample shade.
Similarly, a gift, though small,if received by a deserving hand, will make skies look smaller.

Saturday, 13 December 2014

அறன் வலியுறுத்தல் - 7

அறன் வலியுறுத்தல் - 7




மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால்

எத்துணையும் ஆற்றப் பல ஆனால்  - தொக்க

உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்

கிடந்துன்ணாப் பண்ணப் படும்.



தொக்க                   - compacted ; ஒன்று சேர்ந்து
ஆய                          - உண்டாகிய
உம்பர்                      - மேலுலகம்
ஒப்புரவு                   - நல்லொழுக்கம்






உடல் வாழ்க்கையால் செய்யத்தக்க அறச்செயல்கள் பல உண்டு என்பதை  ஆராய்ந்துப் பார்த்தாலும், நம் உடம்பின் இன்ப நலத்திற்க்காக  மட்டுமே செயல் படாமல், வருங்கால மக்கள் பயன் அடையுமாறு செயல்பட வேண்டும்.



Even though you understand that there's a lot to gain in this bodily (worldly) life, you should not work only for your comforts, but do deeds by which the world in future would enjoy the fruits of your deeds. 






Friday, 12 December 2014

அறன் வலியுறுத்தல் - 6

அறன் வலியுறுத்தல் - 6




இன்றுகொல், அன்றுகொல், என்றுகொல், என்னாது

பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி,

ஒருவுமின் றீயவை, ஒல்லும் வகையான்

மருவுமின் மாண்டார் அறம் .




ஒருவு                     - shun ; விடு
ஒல்லும்வகை    - எல்லா வழியிலும்
மருவு                      - embrace ; சேர்




"மரணம் இன்றா? அன்றா? என்று?" என சொல்லாமல், நமக்கு பின்னாலேயே மரணம் நிற்கிறது என்று எண்ணி, தீமையை விலக்கி, முடிந்தவரை ஏற்று கொள்ளுங்கள் சான்றோர்கள் சொல்லும்  நல்லறத்தை.




Do not ask questions like "Is death today? that day? or which day?". Understand that Death is always standing behind you, and shun all evil things. Embrace virtuous life that Sages teach.

அறன் வலியுறுத்தல் - 5

அறன் வலியுறுத்தல் - 5




கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும் பொழுந்து வேங்காற் றுயர் ஆண் டுழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்காற் பரிவ திலர்.



ஆட்டு                      -  அரைத்து / Grind in a mill
சிறுகாலை               -   அதிகாலை
துரும்பு                    -   சக்கை
வேம்                       -   வேகும்
ஆண்டு                    -   அங்கு
உழவார்                   -    will  not suffer 
பரிவு                       -   இரங்கு 



((அதிகாலையில்)) இழம் கரும்பை பிழிந்து சாறை  எடுத்தபின், சக்கையை வேகவைத்தால் வலி அறியாது. அதுபோல், வருந்தி உடம்பின் முழு பயனையும் பெற்றபின், மரணம் வரும்பொழுது  வருத்தப் படுவதில்லை.




After extracting juice from sugarcane early, when the refuse is thrown into fire, it will not suffer pain.
Similarly, after extracting the fruits of our existence from our embodied existence, will not feel pangs when death shall come.

Friday, 28 November 2014

அறன் வலியுறுத்தல் - 4

அறன் வலியுறுத்தல் - 4




அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும்பயனும் ஆற்றவே கொள்க ! - கரும்பூர்த்த

சாறுபோற் சாலவும் பின்னுதவி; மற்றதன்

கோதுபோற் போடும் உடம்பு.



அரும்                      -   அரிதாக 
கரும்                       -   கரும்பு
ஊர்                           -   sap
கரும்பு  + ஊர்ந்த    (சாறு போல்)
கோது                      -  சக்கை



அரிதாக கிடைக்கும்  உடம்பை பெற்றிருப்பது , பெரும் பயனுள்ள அறசெயல்களை செய்து முடிக்கவே என்று அறியுங்கள்.
கரும்பிலிருந்து பிழிந்த சாறு போல் பெரும் அளவு பின்னால் உதவி, சக்கை போல் வீசப்படும் உடம்பு.




Good all the best virtuous things possible, with the rarely received precious body of yours.
As the juice extracted from sugarcane, your good deeds will be your gain. After that, your body will be thrown away, like the refuse of extracted sugarcane.





அறன் வலியுறுத்தல் - 3

அறன் வலியுறுத்தல் - 3




வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

மனத்தின் அழியுமாம் பேதை; - நினைத்ததனைத்

தொலைய தென்றுணர் வாரே தடுமாற்றத்

தெல்லை இகந்தொருவு வார்.




வெய்ய                         -    fiercely
உயிரா                          -    உயிர்த்து / sighing
தொல்லையது              -     வினையால் 
ஒருவு                          -    transcend /விடு
இக                               -    விடு / நீங்கு 



பழைய செயல்களின் பயனாக, சில கஷ்டங்கள் வந்தால், பேதை மிகவும் சோர்ந்து மனதை அழித்து விடுவான். 
வந்த கஷ்டங்கள் தொலைந்து போகும் என்று எண்ணுவோர், தடுமாற்றமின்றி கஷ்டங்களிலிருந்து விடுபெருவர் !!



When the result of old deeds come to us, the fool sighs heavily & all his soul dies out.
But those who reflect & say 'this will pass' beyond life's perplexity would escape & overcome bad deeds.

Friday, 7 November 2014

அறன் வலியுறுத்தல் - 2

அறன் வலியுறுத்தல் - 2




ஆவாநாம் ஆக்க நசைஇ அறமறந்து

போவாநாம் என்னாப் புலைநெஞ்சே ! ஓலாது

நின்றுஞற்றி வாழ்தி எனினுநின் வாழ்நாள்கள்

சென்றன செய்வ துரை !!!




வாழ்தி                      -   வாழ்வாய்
என்னா                      -   என்னாமல்
நசைஇ                      -   நசைந்து ; விரும்பி
ஆக்க                         -  செல்வம்
நின்                           -   உன் 
புலை                         -  அற்ப 



ஆசைப்பட்ட செல்வத்தை பெற்று வாழ்ந்தபின், அறம் செய்யாமல் இறந்து போகலாம் என்று எண்ணாதே, அற்ப நெஞ்சமே !! 
ஓயாமல் வேலை செய்து நீண்ட நாள் வாழ்ந்த பின்  நீ என்ன செய்வாய்? சொல் !



Say not, O silly soul, we will earn desired wealth and die without doing any Charity. 
Now that you have worked hard ceaselessly, and lived a long life, what will you do when all your happy days are over?

அறன் வலியுறுத்தல் - 1

அறன் வலியுறுத்தல் - 1




அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்

புகத்தாம் பெறாஅர், புறங்கடை பற்றி

மிகத்தாம் வருந்தி இருப்பரே, மேலைத்

தவத்தாற் றவஞ்செய்யா தார்.




புக                       -  புகுதல்
அகத்தாரே           -   வீட்டினுள்ளோர்
புறங்கடை           -   வெளி கதவு / outer Gate 
அண்ணாந்து        -   மேனோக்கு 
மேலை               -   முன்னிலை 




முன் ஜென்மத்தில் தங்கள் தவறு காரணமாக தவம் செய்யாதவர்கள்,
'வீட்டினுள் உள்ளவர்களே சுகமாய் வாழ்கிறார்கள்" என்று அண்ணாந்து நோக்கிப் வீட்டினுள் அனுமதிக்கபடாதவர்களாக  வெளி கதவை பிடித்து வருந்தி நிற்பார்கள்.




Those who did no penance due to some penitence in their former lives, now look up holding the outer gate of a house, but obtain no entrance. Now they suffer more, after realising, those who live inside the houses live blessed life.







யாக்கை நிலையாமை - 10

யாக்கை நிலையாமை  - 10




கேளாதே வந்து கிளைகளா இற்றோன்றி

வாளாதே போலரான் மாந்தர்கள்   -  வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேணீங்கு புட்போல்

யாக்கை தமர்க்கொழிய நீத்து.




கிளை                                -  உறவினர்
செக்கை (சேர்க்கை?)  -  கூடு;
மரன் /மரம்                     -   விருட்சம்
சேண்                                -    நெடுந்தூரம் 
நீத்து                                  -   விட்டுசெல்லுதல் 
ஒழிய                                -   விட்டுவிடல் 
தமர்                                    -   தம் மக்கள் / உறவினர் 
புள்                                       -   பறவை 
வாளாதே                          -   சொல்லாமல் 

இற்றோன்றி                    -    இல் தோன்றி / வீட்டில் தோன்றி 



கேளாமல் வந்து, உறவினர்கள் வீட்டில் தோன்றி, சொல்லாமல் சென்றுவிடுவார்கள் மனிதர்கள். சொல்லாமல் மரத்தின் மேலுள்ள கூட்டை விட்டு நெடுந்தூரம் பறந்து போகும் பறவை போல், மனிதர்களும் உறவினர்களிடம் உடம்பை விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.




Unasked relatives come, appear in the home, and then leave silently. As the bird silently deserts the tree where its nest yet remains, and goes far off, so these leave but their body to their friends.




யாக்கை நிலையாமை - 9

யாக்கை நிலையாமை - 9




புன்னுனிமே னீர்போ னிலையாமை என்றெண்ணி,

இன்னினியே செய்க அறவினை ! - இன்னினியே

நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேள் அலறச்

சென்றான் எனப்படுத லான்.




இன்னினியே                       -  இப்பொழுது, இதே நேரத்திலே
கேள்                                        -  சுற்றம்
புன்னுனிமே னீர்போல   =  புல் நுனி மேல் நீர் போல் 




புல் நுனி மேலுள்ள  நீர்போல் நிலையாதது நம் வாழ்க்கை என்று எண்ணி, இன்றே, இதே நேரத்திலே, அறவினை செய்யுங்கள். இப்பொழுது, இதே நேரத்திலே 'நின்றான், இருந்தான், விழுந்தான், உறவினர்கள் அலறும்படி இறந்தான்' என்பது போல்  நிகழ்வதால்.




Consider that life is transient  like the dew drops on grass blades, do good deeds now, at once !! 'Even now he stood, sat, fell down & while his relatives cried aloud he died' - such is man's life.


யாக்கை நிலையாமை - 8

யாக்கை நிலையாமை - 8




யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற

யாக்கையால் ஆய பயன்கொள்க !  -  யாக்கை

மலை ஆடு மஞ்சுபோற் றோன்றி மற்றாங்கே

நிலையாது நீத்து விடும்.





மஞ்சு                           -   மேகம்
ஆய                             -  உண்டாகிய 
ஆடு                             -  ஆடுதல் 
யாப்பு                           -   கட்டு 




உயிரோடு உடம்பை கட்டாக பெற்றவர்கள், தாம் கொண்ட உடம்பின் மூலம் (மற்றவர்க்கு) பயன் தர வேண்டும் என்பதை அறிவார்களாக !
மலைமேல் செல்லும் மேகம்போல் நம் உடம்பும் தோன்றி நிலையாமல் மறைந்து விடும்.




Those who have gained life in this well-knit body should know that the body they have received is to benefit others. Like the clouds that appear & move over the mountains, our body too shall pass away soon.

யாக்கை நிலையாமை - 7

யாக்கை நிலையாமை - 7




படுமழை மொக்குளிற் பலகாலுந் தோன்றிக்

கெடும்இதோர் யாக்கைஎன் றேண்ணித்  -  தடுமாற்றஞ்

தீர்ப்பேம்யாம் என்றுணருந் திண்ணறி வாளரை

நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்?




தின்னரிவாளர்               -  மூதறிவுடையார்
பலகாலும்                        -  பலமுறை 
மொக்குள்                         -  நீர்க்குமிழி 
நேர்ப்பார்                           -  ஒப்பார் 





கனமழை நேரத்தில்  பலமுறை நீர்க்குமிழி  தோன்றி உடனே அழிந்துவிடும். இதுபோலதான் நமது உடம்பு என்று எண்ணி, தடுமாற்றத்தை விலக்கிக்கொள்ளும் மூதரிவாளரைப் போல் உணர்வோர் யார் இந்த விரிந்த உலகத்தின் மேல்?




Our body is like the  bubbles that appear very often during heavy rains and then disappear immediately. The wise men have understood this, and steadfast on wisdom, have avoided life's dubious ways. Who on this wide world can match this wisdom?

Thursday, 6 November 2014

யாக்கை நிலையாமை - 6

யாக்கை நிலையாமை - 6




நார்தொடுத் தீர்க்கில்என் நன்றாய்ந் தடக்கில்என்,

பார்த்துழிப் பெய்யில்என் , பல்லோர் பழிக்கில்என்,

தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டும்

கூத்தன் புறப்பட்டக் கால்?



நார்                     -      பாசம், கயிறு
தொடு                -      கட்டு
ஈர்க்கில்            -      இழுத்து செல்தல் 
உழி                     -      இடம் 




தோல் பையாகிய உடம்பிலிருந்துக்கொண்டு தன் வேலைகளை நன்றாக செய்த கூத்தனாகிய உயிர், உடலை பிரிந்த பின்  -  கயிர் கட்டி இழுத்தால் என்ன? நல்ல முறையில் அடக்கம் செய்தால் என்ன? கண்ட இடத்தில் போட்டால் தான் என்ன? பலரும் பழித்தால் தான் என்ன?




After the "soul" (life) leaves the 'leather bag' (body) after completing his duties, what matters if you tie the dead body and drag it away, or bury it carefully, or leave it aside in any place, or if many revile the departed ?

யாக்கை நிலையாமை - 5

யாக்கை நிலையாமை - 5




கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலரும்

பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும்  - மணங்கொண்டீண்

டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே

தொண்டொண்டொ டென்னும் பறை.




கணம்                -  கூட்டம்
கல்                    -  "கல்" என்று கதறல் 
உய்த்து              -  செலுத்து
சாற்று                -  அறிவித்தல்




பிணத்தை சுமந்து செல்லும் வழியில்  கூட்டமாய் சேர்ந்து உறவினர்கள் "கல்" என்று அலறுவதைக்  கண்டபின்னும் - கல்யாணம் செய்துக்  கொண்டு, மணவாழ்கையே இன்பமானது என்று நினைப்பவனுக்கும் ஒலிக்கும் "டொன் டொன் டொன்" என்னும் சாப்பறை (மரண அறிவிப்பு) !!




Even after seeing his relatives come together and lament, while the corpse is being carried to the funeral ground, he married & asserts that married life is a bliss. The funeral drums speaks out, and mocks his assertion.


Tuesday, 4 November 2014

யாக்கை நிலையாமை - 4

யாக்கை நிலையாமை - 4



சென்றே எறிப ஒருகால்; சிறுவரை

நின்றே ஏறிப பறைமினை; - நன்றே காண் !

முக்காலைக் கோட்டினுண் மூடிட்தீக்கொண் டெழுவார்

செத்தாரை சாவார் சுமந்து.




ஊர்வலத்தில் மேளம்  அடிப்பார்கள்.
சிருவேளை கழித்து, இரண்டாம் முறை மேளம் அடிப்பார்கள்.
நன்றாய் கவனியுங்கள் !!
மூன்றாம் முறை மேளம் அடித்ததும், சவத்தை மூடி, தீ கொண்டு எழுவார்கள் சுடுகாடு நோக்கி . 
செத்தாரை சாவோர் சுமந்து செல்வார்கள்.




They march and strike once. A little while later, they strike the drum again.
Behold properly !! They strike the drum a third time, cover the dead body, take fire, and go forth - the dying bear the dead.

யாக்கை நிலையாமை - 3

யாக்கை நிலையாமை - 3




மன்றங் கறங்க மணப்பறை ஆயின 

அன்றவற் காங்கே பிணப்பறையாப்   - பின்றை 

ஒலித்தலும் உண்டாம், என் றுய்ந்துபோம் ஆறே 

வலிக்கும்ஆம் மாண்டார் மனம்.



கறங்க             -  ஒலிக்க
மணப்பறை      -  கல்யாண மேளம்
பிணப்பறை      -  சாப்பறை / 
பின்றை           -  பிறகு  
உய்த்து            -  தப்பித்து 




கல்யாண மண்டபத்தில் ஒலித்த மேளம், அதே தினத்தில், ஆகியது மணமகனின் சவ ஊர்வலத்தின் சாப்பறை மேளம். பின்நாளில் சாப்பறை ஒலித்ததும் உண்டு. 
இதை அறிந்து, உயர்ந்த மனத்தார், இவைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி தேடிக்கொள்வர்.




The same day on which marriage drums were heard in the marriage hall, had become funeral drums. Some happened even on a later day. Knowing this happens, the men with lofty minds strive to find the way out of such incidents.

















Monday, 3 November 2014

யாக்கை நிலையாமை - 2

யாக்கை நிலையாமை - 2




வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம்

வீழ்நாட் படாஅ தெழுதலால்  - வாழ்நாள்

உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ! யாரும்

நிலவார் நிலமிசை மேல்.



வயங்கு                          -    பிரகாசமான 
அலகு                             -    எண் 
மண்டிலம்                      -    சூரியன் 
வீழ்நாள்                         -    முடிவடைந்த நாள் 
படா                               -     நிகழ் 
உலவாமுன்                   -     அழியும்முன் 
ஆற்று                            -    செய்
ஒப்புரவு                          -    அறம் ; நல்ல நடத்தை



வாழ்நாளை எண்ணிக்கையாக கொண்டு, பிரகாசமாக ஒளிக்கும் சூரியன், நாள் முடிவுபெற்றதும் மறுநாள் எழும். வாழ்நாட்கள் அழியும்முன் தகுந்த அளவு அறம் செய்யுங்கள். 
காரணம், யாரும்  நிலத்தின்மேல் நிரந்திரமாக நிலைப்பதில்லை.



The shining sun, measures your day everyday & after the day ends, rises next day without fail. Before your days pass away, do charity, as befits you; for no one abides on earth.


Friday, 31 October 2014

யாக்கை நிலையாமை - 1

யாக்கை நிலையாமை - 1




மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத்

தலைமிசைத் கொண்ட குடையர்  - நிலைமிசைத்


துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டார் அல்லால்


எஞ்சினார் இவ்வுலகத் தில்.





மதியம்              -  நிறைமதி; சந்திரன்
குடையர்             -  குடையின் கீழ் உள்ளவர்
துஞ்சு                -  மரித்தல்
தூற்று                -  அறிவித்தல் 



மலைமீது தோன்றும் நிலாபோல், யானை மீது வைத்த குடையின் கீழ் அமர்த்த இராஜாக்களும் இறந்தனர் என்று பூமியில் அறிவிக்கப்பட்டார்கள்.
இவ்வுலகத்தில் மரணத்தை வென்றவர்கள் யாரும் இல்லை.




Even King that rode on elephants, beneath an umbrella, like the moon appearing over mountains, have had their names proclaimed on earth as dead. No one in this world has escaped death.





இளமை நிலையாமை - 10

இளமை நிலையாமை - 10




ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்

தோட்கோப்புக் காலாத்தாற் கொண்டுய்ம்மின்; பீட்பிதுக்கிப்

பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்

கள்ளங் கடைப்பிடித்த னன்று.




உழல்                                  -   திரி; அலைதல் 
ஆட்பார்த்து உழல்         = ஆளைத் தேடி அலைகிறது 
அருளில்                             -  இரக்கம் இல்லாத 
தோட் கோப்பு                    -  கட்டுச் சோறு 
பீள்                                         -   கரு 
கூற்று                                  -   மரணம் / எமன்
உய்ம்மின்                         -   தப்பித்து கொள் 
கடைப்பிடி                         -   அறிந்துக் கொள்ளுங்கள் 
கள்ளம்                                -   வஞ்சனை 



இரக்கம் இல்லாமல் ஆள் பார்த்து அலைகிறது எமன் (மரணம்) என்பது உண்மை என்பதால், (தோளில்) கட்டுச் சோறு எடுத்து  காலையிலேயே தப்பித்துக் கொள்ளுங்கள்.

கருவிலிருந்து வந்த சிறு குழந்தையை, தாய் அலறக், கொண்டு செல்லும் மரணத்தின் வஞ்சனையை அறிந்துக்கொள்ளுங்கள்.




It's true that merciless Death is roaming around looking for his man.
Pack your food, & escape early morning.
Death snatches away newly born babies from wailing mothers. Its good to keep in mind Death's guile.

இளமை நிலையாமை - 9

இளமை நிலையாமை - 9




'மற்றறிவா நல்வினை, யாம் இளையம்' என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ் செய்ம்மின்;

முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு.




மற்று           -  பின்னே
கர                  -  மறுக்காமல் 
தீவளி           -  தீய குணம் 



"நல்வினையை பின்னே அறிவோம், நாங்கள் இளைஞர்கள்", என்று சொல்லாமல், கையில் செல்வம் உள்ளபொழுதே மறுக்காமல் அறம் செய்யுங்கள்.
பழுத்த பழங்களைத் தவிர, தீய குணத்தின் காரணமாக, காய்களும் உதிர்ந்து விழுவது உண்டு.




Do not say, "We will learn about virtue later, now we are young".
While the wealth in your hands, do not refuse to give it to the needy.
Not just the ripe fruits fall, but due to evil deeds, even the unripe fruits fall.

இளமை நிலையாமை - 8

இளமை நிலையாமை - 8




பருவம் எனைத்துள ?  பல்லின்பால் ஏனை?

இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால்

உண்னாட்டங் கொள்ளப் படுதலால், யாக்கைக்கோள்

எண்ணார் அறிவுடையார்.




பருவம்                      -   ஆண்டு; வயது
எனைத்து                  -   எத்தனை
இரு                              -   இரண்டு
சிகை                           -   உண்டிசிகை (course at a meal)
உண்ணாட்டம்         -   துல்லியமான கேள்வி
யாக்கை                      -   உடம்பு
கோள்                          -    குணம்



"உங்கள் வயது எத்தனை?", "உங்கள் பற்களின் நிலை என்ன? வலிமை உள்ளதா?", "இரண்டு வகை உணவு உண்டீரோ?" - இவ்வாறு அக்கறையுடன் கேள்விகள் சிலர் கேட்பதின் மூலம், நம் உடம்பு நிலையற்றது என்று அறிவுடையோர் அறிவர்.




"How old are you?" , "Are your teeth strong?", "Did you eat 2 courses of food", some men ask with kindness. From such inquisitive questions, the wise learns that our body is a thing of nought.



இளமை நிலையாமை - 7

இளமை நிலையாமை - 7




பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்

கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை; - நனி பெரிதும்

வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் ; மற்றிவளும்

கொற்கண்ணள் ஆகுங் குனிந்து.




பனி                                       -    குளிர்ச்சி
நனி                                       -    மிகவும்
வெஃகு                                 -    விரும்பு
கோற்கண்ணள்                -    கண் பார்வை குறைந்த
வேற்கண்ணள்                 =   வேல் + கண்ணுடையவள் 
பயன்மரம்                          -    பழங்கள் கொண்ட மரம் 



பனி பட்ட  பூங்காவின்  பழம்  கொண்ட மரத்திலிருந்து உதிர்ந்து விழும் கனிபோன்றது இளமை. வேல் எய்தும் கவர்ச்சிமிக்க கண்களுடையவள் என்று இவளை விரும்புவோர் அறியவேண்டியது : இவளும் ஒரு நாள் கண் பார்வை குறைந்து, கோல் ஊன்றி கூனிப்  போவாள்.




Youth is like the ripe fruit that falls from tree in the dewy grove. 
Desire not her whose eyes are as bright as darts. Soon, she too will walk bent down, with a staff in hand to aid her dim sight.



இளமை நிலையாமை - 6

இளமை நிலையாமை - 6




வெறிஅயர் வெங்களத்து வேன்மகன் பாணி 

முறிஆர் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க,


மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி 


அறிவுடை யாளர்கண் இல்.




அயர்                     -   செய் 
வெங்களம்         -    ஆடு வெட்டும் இடம் / கடை 
வேன்மகன்        -    வேல் தாங்கிய பூசாரி 
முறி                      -    தளிர் 
நறுங்கண்ணி    -    வாசமுடைய பூமாலை 
மறி                        -    ஆட்டுக்குட்டி 
மன்னா                 -    நிலையாத 



ஆட்டுக்கறி கடையில்  வேல் தாங்கிய வெறி கொண்ட பூசாரியின் பூமாலையில் காணும் தளிர்களை தின்னும் ஆட்டுக்குட்டி போல் உள்ளது இளமையின் நிலையா மகிழ்ச்சி. அறிவுடையோர் இவ்வகை மகிழ்ச்சியில் ஈடுபடுவது இல்லை.




Just how a lamb in the slaughterhouse crops the fragrant shoots from the garland in the slayer's hand, is the transient joy of the youth. However, such temporary joy is not found amid the wise men.






Wednesday, 29 October 2014

இளமை நிலையாமை - 5

இளமை நிலையாமை - 5





எனக்குத்தாய் ஆகியாள்  என்னை ஈங்கிட்டுத் 

தனக்குத்தாய் நாடியே சென்றாள் ; தனக்குத்தாய் 

ஆகி  யவளும் அதுவானாற் றாய்த்தாய்க் கொண் 

டேகும் அளித்தில் வுலகு.




ஏகும்                -  செல்லும் 
அளி                  -  எளிமை 





எனக்கு தாய் என்னை இங்கு விட்டு, தன் தாயை நாடிச் சென்றாள் .
அவளது தாயும் அதுபோலவே தன் தாய் நோக்கி  சென்றாள் . இதுவே இவ்வுலகம் செல்லும் வழி.




My mother left me here, and went to seek her mother, who also has gone in search of her mother. Thus the search goes on in this world.

இளமை நிலையாமை - 3

இளமை நிலையாமை - 3




சொற்றளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்ப்

பற்கழன்று பண்டம் பழிகாறும்  -  இற்செறிந்து

காம நெறிபடரும் கண்ணினார்க் கில்லையே

ஏம நெறிபடரும் ஆறு.



சொற்றளர்ந்து           -   சொல் தளர்ந்து
பண்டம்                        -    தின்பொருள்
பழிகாறும்                   -    வெறுக்கும்
செறி                              -    நெருங்கி
ஆறு                               -    வகை




சொல் தளர்ந்து, கோல் ஊன்றி சோர்ந்து நடந்து, பற்கள் விழுந்து பண்டமும் வெறுக்கும் முதிய வயதிலும் காண்போர் வெறுக்கும் அளவு , காம இன்பத்தில் நெருங்கி வாழ்வோருக்கு விடுபெறும் வழி இல்லை.




Though their speech falters, lean on staff, walk tottering, & their teeth falls, they desire sexual pleasures till they are scorned by all. To these old men, there's no safe way out.


Monday, 27 October 2014

இளமை நிலையாமை - 4

இளமை நிலையாமை - 4




தாழாத் தளராத் தலைநடுக்காத் தண்டூன்றா

வீழா இறக்கும் இவண்மாட்டுங்  - காழில்லா

மம்மர்கொண் மாந்தர்க் கணங்கா குந் தன்கைக்கோல்

அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.




தாழா                       -      தாழ்ந்து ; கூனி
தளரா                      -       தளர்ந்து
தண்டூன்றா           -      கோல் ஊன்றி
வீழ்                           -      விழு / கெடு
காழில்லா              -      மூதறிவில்லாத
மம்மர்                      -      மயக்கம்
அணங்கா               -       துன்பம்
ஞான்று                   -      பொழுது




முதுமையில் கூனி, தளர்ந்து, தலைஆடி, கோலூன்றி வீழ்ந்து இறந்துப் போகும்  இவள் மேல்  மயங்கும் மூதரிவில்லர்கள்,  தாய் ஊன்றிய கைக்கோலை இவள் ஊன்றும் போது, துன்பத்தையே அடைவார்கள்.




Those who have desire for a woman, who may in  her old age droop, shake, hold a staff in her hand, fall & pass away, may feel nothing but anguish when she grasps in her hand the staff her mother had held once.



இளமை நிலையாமை -1

இளமை நிலையாமை -1




நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்

குழவி இடத்தே துறந்தார்;  புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி

இன்னாங் கெழுந்திருப் பார்.!!




குழவி                        -    இளமை
மன்னா                      -    unstable / நிலையாத
இன்னாங்கு              -    தொல்லை
புரை                           -     பிழை / தவறு




முதுமை வரும் என்று எண்ணி, அறிவுடையோர், இளமையிலேயே ஆசைகளை துறப்பர். நிலையாத இளமையில் தொடர்ந்து தவறுகள் செய்து மகிழ்ந்தோரே  தாங்கா வலியால் கோலுன்றி எழுந்திருப்பார்கள்.



Knowing very well that 'grey days will come', the wise would renounce the world even in young age.
But, they who enjoy unstable & faulty life in their youth, will painfully rise up leaning on staff.

இளமை நிலையாமை - 2

இளமை நிலையாமை - 2




நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;

அற்புத தளையும் அவிழ்தன ; உட்காணாய !

வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம ? வந்ததே

ஆழ்கலத் தன்ன கலி.




நார்                     -     பந்தம் 
அஃகு                  -     குறைதல் 
அற்பு                   -    அன்பு / காதல் 
தளை                  -    பந்தம்; பாசம் 
ஆழ்கலம்          -    முங்கும் படகு /கப்பல் 
கலி                      -     குரல் / கூப்பாடு 



நன்பர்களின் பந்தம் அறுந்தன; நல்லோரும் குறைந்தனர்.
காதல் பாசமும் அவிழ்ந்தது;
உள்ளத்தை நோக்கிப்பார் !! இவ்வாழ்கையில் சம்பாதித்தவை எதும் உண்டோ?
முங்கும் கலத்திலிருந்து வரும் குரல் அல்லவா இது !!



Ties of friendship are severed; the good ones are reduced. Love's bonds are loosened too;
Look within yourself & ask, have I gained anything from this life?
The cry comes up as from a sinking vessel.











Sunday, 26 October 2014

செல்வநிலையாமை - 10

செல்வநிலையாமை - 10



உடாஅதும் உண்ணாதுந் தம்முடம்பு செற்றுங்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது

வைத்தீட்டி னர்இழப்பர்  - வான்றோய் மலைநாட !

உய்த்தீட்டுந் தேனீக் கரி.




செற்றும்                -     வருத்தியும்
கெடா                      -    அழியா
ஈட்டு                        -    சேர்த்து வைத்தல் ; hoard
உய்                          -    சேர்த்தல்
கரி                            -    சாட்சி




நல்ல உடைகள் உடாமல், நல்ல உணவு உண்ணாமல், தம் உடம்பை
வருத்தியும், நல்ல அறமும் செய்யாதோர் : கொடாமல் பதுக்கி வைப்போர் இழப்பர் .  மேகம் தொடும் மலையின் அரசனே !! சேர்த்து, பதுக்கி வைத்த தேனீயே இதற்கு சாட்சி.



Those who economise on clothes & food, and mortify their bodies, yet do not deeds of deathless virtue by hoarding them shall suffer loss - Lord of the cloud- capped hills - the bees that collects & hoards honey proves this.

செல்வநிலையாமை - 9

செல்வநிலையாமை - 9




உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ் செய்யான்,

துன்னருங் கேளிர் துயர்களையான்  - கொன்னே

வழங்கான், பொருள் காத்திருப்பான் ஏல், அ ஆ !

இழந்தான்என் றெண்ணப் படும்.




ஒளிநிறான்                -    ஒளி விட்டு காண்பிக்கமாட்டான்
காத்திருப்பான்          -    காத்து (சேர்த்து) வைப்பான்



தன் செல்வத்தை அனுபவிக்கமாட்டான், காட்ட மாட்டான், புகழ் பெரும்படி ஏதும் செய்யமாட்டான், உறவினர்களின் துயரை துடைக்கமாட்டான், வீணாய் செலவிடமாட்டான், ஆனால், சேர்த்தும் காத்தும்  வைப்பான், "ஆஹா, இவன் இழந்தான்" என்று மக்கள் கூறுவார்கள்.



He will not spend, shed no light on his wealth, performs nothing that others may praise, will not help his relatives in need, will not spend, but will hoard his wealth in vain.

"Aha ! he's lost everything", men will say about him.






செல்வநிலையாமை - 8

செல்வநிலையாமை - 8



'செல்வர் யாம்' என்றுதாஞ் செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெரும்செல்வம்  -  எல்லிற்

கருங்கொண்மூ  வாய்திறந்த மின்னும்போற் தோன்றி

மருங்கறக் கெட்டு  விடும்.




செல்வுழி             --      செல்லும் வழி;
புல்லறிவாளர்    -       குறைந்த அறியுடையவர்கள்
எல்லில்                 -       இரவில்
கொண்மூ              -       மேகம்
மருங்கற                -      ஒரு அறிகுறி இல்லாமல்


நாங்கள் செல்வம் கொன்றவர்கள் என்று கூறுபவர்கள், தாங்கள் நடக்கும் வழி தெரியாமலும் நோக்கம் இல்லாமலும் நடப்பவர்கள்.

அவர்கள் செல்வம், இரவில் கரும் மேகம் வாய்திறந்த மின்னல் போல் தோன்றி, ஒரு அறிகுறி இல்லாமல் கெட்டுவிடும்.



The low understanding men with huge wealth always boast of being rich, yet they do not understand their path or their destination.

Their wealth perishes without a trace like the flash of lightening when the black clouds opens its mouth in the night.



செல்வநிலையாமை - 7

செல்வநிலையாமை - 7




தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங் 

கூற்றம் அளந்துறுந் நாள் உண்ணும்; ஆற்ற 

அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும் 

பிறந்தும் இறவாதாரில்.



தோற்றஞ்சான்          -   அருமையாக தோற்றமளிக்கும் 
ஞாயிறு                       -   சூரியன் 
நாழி                              -   அளவில்லா 
வைகலும்                   -   நாள்தோறும் 
கூற்றம்                        -   மரணம் 
ஆற்ற                            -   மிகுதியாக 




அருமையான தோற்றமுடைய சூரியன், நாள்தோறும் நாட்களை அளந்து 
அழித்துக்கொண்டிருக்கிறது. 
அளவற்று அறம் செய்யுங்கள், அருளுடையவர்களாக .
பிறந்தபின் இறக்காதவர்கள் யாருமில்லை.



The wonderful look sun measures your days everyday & devours them. Hence, give to charity, with grace. All those who are born, have not escaped death !!!

செல்வநிலையாமை - 5

செல்வநிலையாமை - 5



என்னானும் ஒன்றுதங் கையுறப் பெற்றக்கால்

பின்னாவ தென்று பிடித்திரா  - முன்னே

கொடுத்தார் உயப்பொலர் கோடிறீக் கூற்றம்

கொடுத்தாறு செல்லுஞ் கரம்.




என்னானும்               -    எதுவானாலும்
உய                               -    escape /
ஆறுசெல்                   -    பாலைவன வழி
கூற்றம்                       -     மரணம்
கோடு இல் தீ             -    அளவு இல்லா கொடிய


கொடிறீ                        =    கோடு  இல் தீ


ஏதாவது ஒன்று தன் கையில் கிடைத்தால், பின்நாளில்
உபயோகம் ஆகும் என்று பிடித்திருக்க வேண்டாம்.
காரணம்,
முன்பே கொடுத்தவர்கள் கொடிய மற்றும் தீய மரணம்
நம்மை பாலைவனம் வழியாக இழுத்து செல்வதிலிருந்து தப்பலாம் !!




If you gain or receive something in your hand, do not hold it with you thinking it will be of use some other day. Because, those you give to charity in time, would escape the cruel & inflexible death that drags the captives along the desert !!!