Saturday, 27 December 2014

தூய்தன்மை - 6

தூய்தன்மை - 6




குடருங் கொழுவுங் குருதியும் என்பும்

தொடரு நரம்பொடு தோலும்  - இடையிடையே

வைத்த தடியும் வழும்பும்ஆம் ; மற்றிவற்றுள்

எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள் ?




குடருங்            -  குடலும்
கொழு              -  மூளை
குருதி               -   இரத்தம்
தொடரும்         -   இணைக்கும்
என்பும்             -   எலும்பு
தடி                   -   சதை
வழும்பு            -   கொழுப்பு
எத்திறம்           -    எந்த வகை
ஈரம்                 -    ஈரமான
கோதை            -    பூமாலை




குடல், மூளை, இரத்தம், இலும்பு  இவைகளை இணைக்கும் நரம்புகளும் தோலும்; இடையிடையே வைத்த சதையும் கொழுப்பும் கொண்டதல்லவா  உடம்பு? இதில் எந்த வகையானவள் ஈரப் பூச்சூட்டிக்கொள்பவள் ?




Our body contains intestines, brains, blood, bones & nerves that connect these & skin - and here and there fat & flesh interposed. In such a body, what sort of being is she who insist on adorning herself with fresh garlands?



No comments:

Post a Comment