Friday, 26 December 2014

தூய்தன்மை -3

தூய்தன்மை -3




தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூட்டிப்

பொய்க்கொலஞ் செய்ய ஒழியுமே - எக்காலும்

உண்டி வினையுள் உறைக்கும் எனப் பெரியோர்

கண்டுகை விட்ட மயல் .



கோலம்        -    அலங்காரம் 
மயல்           -    சரீரம்;
உண்டி          -    உணவு
வினையுள்   -   வினையால்
உறைக்கும்   -   நாற்றமடிக்கும் 



வாயில் வெற்றிலை பாக்கு மென்று, தலைநிறையப் பூச்சூட்டி மற்றும் பொய் அலங்காரத்தால் - எப்பொழுதும் உண்பதால் உடம்பிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்க முடியாது. இதை அறிந்த பெரியோர் உடம்பை கைவிட்டனர்.




By chewing paan, wearing flower on head & adorning body with expensive clothes you cannot stop the foul smell reeking out of the body from excessive consumption of food. Knowing this, the learned men abandoned the body.




No comments:

Post a Comment