செல்வநிலையாமை - 7
தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங்
கூற்றம் அளந்துறுந் நாள் உண்ணும்; ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் இறவாதாரில்.
தோற்றஞ்சான் - அருமையாக தோற்றமளிக்கும்
ஞாயிறு - சூரியன்
நாழி - அளவில்லா
வைகலும் - நாள்தோறும்
கூற்றம் - மரணம்
ஆற்ற - மிகுதியாக
அருமையான தோற்றமுடைய சூரியன், நாள்தோறும் நாட்களை அளந்து
அழித்துக்கொண்டிருக்கிறது.
அளவற்று அறம் செய்யுங்கள், அருளுடையவர்களாக .
பிறந்தபின் இறக்காதவர்கள் யாருமில்லை.
The wonderful look sun measures your days everyday & devours them. Hence, give to charity, with grace. All those who are born, have not escaped death !!!
No comments:
Post a Comment