Friday, 31 October 2014

இளமை நிலையாமை - 8

இளமை நிலையாமை - 8




பருவம் எனைத்துள ?  பல்லின்பால் ஏனை?

இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால்

உண்னாட்டங் கொள்ளப் படுதலால், யாக்கைக்கோள்

எண்ணார் அறிவுடையார்.




பருவம்                      -   ஆண்டு; வயது
எனைத்து                  -   எத்தனை
இரு                              -   இரண்டு
சிகை                           -   உண்டிசிகை (course at a meal)
உண்ணாட்டம்         -   துல்லியமான கேள்வி
யாக்கை                      -   உடம்பு
கோள்                          -    குணம்



"உங்கள் வயது எத்தனை?", "உங்கள் பற்களின் நிலை என்ன? வலிமை உள்ளதா?", "இரண்டு வகை உணவு உண்டீரோ?" - இவ்வாறு அக்கறையுடன் கேள்விகள் சிலர் கேட்பதின் மூலம், நம் உடம்பு நிலையற்றது என்று அறிவுடையோர் அறிவர்.




"How old are you?" , "Are your teeth strong?", "Did you eat 2 courses of food", some men ask with kindness. From such inquisitive questions, the wise learns that our body is a thing of nought.



No comments:

Post a Comment