Friday, 31 October 2014

இளமை நிலையாமை - 6

இளமை நிலையாமை - 6




வெறிஅயர் வெங்களத்து வேன்மகன் பாணி 

முறிஆர் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க,


மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி 


அறிவுடை யாளர்கண் இல்.




அயர்                     -   செய் 
வெங்களம்         -    ஆடு வெட்டும் இடம் / கடை 
வேன்மகன்        -    வேல் தாங்கிய பூசாரி 
முறி                      -    தளிர் 
நறுங்கண்ணி    -    வாசமுடைய பூமாலை 
மறி                        -    ஆட்டுக்குட்டி 
மன்னா                 -    நிலையாத 



ஆட்டுக்கறி கடையில்  வேல் தாங்கிய வெறி கொண்ட பூசாரியின் பூமாலையில் காணும் தளிர்களை தின்னும் ஆட்டுக்குட்டி போல் உள்ளது இளமையின் நிலையா மகிழ்ச்சி. அறிவுடையோர் இவ்வகை மகிழ்ச்சியில் ஈடுபடுவது இல்லை.




Just how a lamb in the slaughterhouse crops the fragrant shoots from the garland in the slayer's hand, is the transient joy of the youth. However, such temporary joy is not found amid the wise men.






No comments:

Post a Comment