Friday, 31 October 2014

இளமை நிலையாமை - 9

இளமை நிலையாமை - 9




'மற்றறிவா நல்வினை, யாம் இளையம்' என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ் செய்ம்மின்;

முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு.




மற்று           -  பின்னே
கர                  -  மறுக்காமல் 
தீவளி           -  தீய குணம் 



"நல்வினையை பின்னே அறிவோம், நாங்கள் இளைஞர்கள்", என்று சொல்லாமல், கையில் செல்வம் உள்ளபொழுதே மறுக்காமல் அறம் செய்யுங்கள்.
பழுத்த பழங்களைத் தவிர, தீய குணத்தின் காரணமாக, காய்களும் உதிர்ந்து விழுவது உண்டு.




Do not say, "We will learn about virtue later, now we are young".
While the wealth in your hands, do not refuse to give it to the needy.
Not just the ripe fruits fall, but due to evil deeds, even the unripe fruits fall.

No comments:

Post a Comment