Friday, 7 November 2014

யாக்கை நிலையாமை - 10

யாக்கை நிலையாமை  - 10




கேளாதே வந்து கிளைகளா இற்றோன்றி

வாளாதே போலரான் மாந்தர்கள்   -  வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேணீங்கு புட்போல்

யாக்கை தமர்க்கொழிய நீத்து.




கிளை                                -  உறவினர்
செக்கை (சேர்க்கை?)  -  கூடு;
மரன் /மரம்                     -   விருட்சம்
சேண்                                -    நெடுந்தூரம் 
நீத்து                                  -   விட்டுசெல்லுதல் 
ஒழிய                                -   விட்டுவிடல் 
தமர்                                    -   தம் மக்கள் / உறவினர் 
புள்                                       -   பறவை 
வாளாதே                          -   சொல்லாமல் 

இற்றோன்றி                    -    இல் தோன்றி / வீட்டில் தோன்றி 



கேளாமல் வந்து, உறவினர்கள் வீட்டில் தோன்றி, சொல்லாமல் சென்றுவிடுவார்கள் மனிதர்கள். சொல்லாமல் மரத்தின் மேலுள்ள கூட்டை விட்டு நெடுந்தூரம் பறந்து போகும் பறவை போல், மனிதர்களும் உறவினர்களிடம் உடம்பை விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.




Unasked relatives come, appear in the home, and then leave silently. As the bird silently deserts the tree where its nest yet remains, and goes far off, so these leave but their body to their friends.




No comments:

Post a Comment