Monday, 18 May 2015

துறவு - 10

துறவு - 10




துன்பமே மீதூரக் கண்டுற் துறவுள்ளார்

இன்பமே காமுறுவர் ஏழையார்; - இன்பம்

இசைதோறு மற்றத னின்னாமை நோக்கிப்

பசைதல் பரியாதா' மேல்.




மீதூர            -   அடர்ந்து வருதல் ; மெலிட்டுவருதல் 
இசை            -    இயலுதல்; ஒன்று படுதல் 
தோறு           -    எல்லாவித 
பசைதல்       -    பற்றுதல் 
பரியாதல்     -    விரும்புதல் 




துன்பமே மேன்மேலும் வருவதைக் கண்டும் துறவு கொள்ளாமல் இன்பமே விரும்புவர் அறிவில்லாதோர். 
எந்தவித இன்பத்தையும் ஏற்பதில்  வரும்  துன்பத்தைக் கண்டு, இன்பத்தை  பற்றுதலை விரும்புவதில்லை  நல்லோர்கள்.





Even though afflictions affect foolish men continuously, they never consider renunciation.
The great men, in every joy behold its pain, and espouse it not.




No comments:

Post a Comment