Thursday, 14 May 2015

துறவு - 3

துறவு - 3




இல்லம் இளமை எழில்வனிப்பு மீக்கூற்றம்

செல்வம் வலிஎன் றிவை எல்லாம்  - மெல்ல

நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்

தலையாயர் தாம்உய்யக் கொண்டு.




எழில்              - அழகு
மீக்கூற்றம்      -  மிகுதியாக போற்றுதல் / செல்வாக்கு 
வலி                -  வலிமை
நெடியார்         -  தள்ளிப் போடார்
தலையாயர்    -  தலைவர்
உய்                -  தப்பித்தல்




இல்லற வாழ்க்கை, இளமை, அழகு, செல்வாக்கு, செல்வம் மற்றும் வலிமை என்பவை எல்லாம் வாழ்வில் நிலையாதவைகள் என்று அறிந்து, சான்றோர்கள்  நாள் தாழ்த்தாமல் துறந்து தப்பித்துக் கொள்வர்.




Knowing very well that  : marital life, youth, beauty, fame, wealth and strength all pass away, the great men, without prolonging the time, renounce all these things and save themselves.

No comments:

Post a Comment