Monday, 30 May 2016

குடிப்பிறப்பு - 1 (நாலடியார் - 141)

குடிப்பிறப்பு - 1


உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்

குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;

இடுக்கண் டலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புற் கறிக்குமோ மற்று?



உலறி                      -   தேய்ந்த / இத்துப் போன
கொடிப்புல்            -   அருகம்புல்
கறி                            -   உண்ணுதல்
இடுக்கண்               -   இக்கட்டு / துன்பம்
அரிமா                     -    சிங்கம்


பசியால் வாடி துன்புறும் போதும், சிங்கம் அருக்கம் புல்லை உண்ணுமோ ? அதைப்போல, இத்துப் போன ஆடை உடுத்தி, பசியால் உடம்பு வாடி நலிந்த போதும், உயர் குடியில் பிறந்தோர், தங்கள் கொள்கையிலிருந்து விலகுவதில்லை.



Though their clothes may be worn out & their body worn with want, men from noble birth do not leave their principles, even a bit.  Even if hunger torment them, do lions eat the creeping grass?








No comments:

Post a Comment