Friday, 5 June 2015

தீவினையச்சம் - 1

தீவினையச்சம் - 1



துக்கத்துட் டூங்கித் துறவின்கட் சேர்கலா

மக்கட் பிணத்த சுடுகாடு; - தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்குங் காடே புலன்கெட்ட

புல்லறி வாளர் வயிறு.




துக்கம்                       -   சோகம் தரும் உலக செயல்கள்
தூங்கி                        -   மயங்கி 
சேர்கலா                    -  சேராத
தொக்க                      -  ஒன்று கூடி
புள்ளி                        -  பறவை
புலன்கெட்ட              -  அறிவற்ற
புல்லறிவாளர்           -  அற்பமான அறிவு



துக்கம் தரும் உலக செயல்களுள் மயங்கி கிடந்து, துறவு வாக்கையில் ஈடுபடாமல் வாழ்ந்த மக்களின் பிணங்கள் வரும் இடம் தான் சுடுகாடு.
எல்லா விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இடுகாடாக அமைவது அறிவற்ற, அற்பமான அறிவை உடையவர்களின் வயிறு.




The burial ground is filled with bodies of men who lived among sorrows, but never gave themselves to a ascetics' lives. Foolish and perverted men's belly was the burial ground of most animals and birds.

No comments:

Post a Comment