Saturday, 6 June 2015

தீவினையச்சம் - 8

தீவினையச்சம் - 8



உள்ளதா னள்ளா துறுதித் தொழிலராய்க்

கள்ளத்தா னட்டார் கழிகேண்மை  - தெள்ளிப்

புனற் செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட !

மனத்துக்கண் மாசாய் விடும்.




உள்ள                  - உள்ளத்தால்
உறுதி                  -  பலம் / ஸ்திரம்
நட்டார்                -  நண்பர்
நள்ளாது              - நண்பராய் ஏற்றுக்கொள்ளாது
கள்ள                   - கள்ளம் / வஞ்சனை
செதும்பு               - வழுக்கு நிலம்
மாசு                    -  குற்றம்
கழிகேன்மை       -  நெருங்கிய நட்பு
தெள்ளி               -  வீசுதல்
புனற்                   -   நீரோட்டம்
மாசு                    -   குற்றம்




நீர்ரோட்டம்  சேற்றை அலைத்தொதுக்கும் பூக்கள் உடைய  குன்றுகள் கொண்ட நாட்டின் அரசனே ! உள்ளத்தால் நட்பு கொள்ளாமல், உறுதியான சில செயல்களால் வஞ்சனையாக நட்பு காட்டுவது, மனதில் பெரும் குற்றம் உடையதாகி விடும்.




Lord of the flowery hills, where streams wash out slippery sand from their way ! Those who do not have friendship from their heart, but show certain deeds to show off their fake friendship,will have crime in their minds.



No comments:

Post a Comment