Friday, 19 June 2015

கல்வி - 9

கல்வி - 9



கல்லாரே ஆயினுங் கற்றோரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்; - தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.




தலைபடுவர்                  -  முன்னேறுவர்
தொல்சிறப்பு                  -   பழமையான சிறப்பு
ஒண்ணிற                      -  ஒளிமிக்க நிறம் 
ஒழுகு                           -  கலந்து கொள்ளுதல் 
பாதிரிப்பூ                       -  பாடலம்  பூ
புத்தோடு                       -  புது மண்பானை
பயம்                             -  பலன்




கல்லாதவர்களே ஆனாலும் கற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதால் , நல்லறிவில் நாள்தோறும் முன்னேறுவார்கள் -  ஒளிமிக்க நிறமும் மணமும் கொண்ட  பாதிரிப்பூவை  சேர்வதால்  புதிய மண்பானை தண்ணீருக்கு அம்மணத்தை  தருவது போல !!




Though uneducated, if they mingle among educated people, they can improve their knowledge every day - just as when the 'padri' flower of old renown, with  bright hue & aroma, mingles with the new earthen pot, spreads the fragrance to the water in the pot !!


No comments:

Post a Comment