Saturday, 6 June 2015

தீவினையச்சம் - 10

தீவினையச்சம்  -  10




மனைப்பாசம் கைவிடாய்; மக்கட்கென்  றேக்கி

எனைத்தூழி வாழ்த்தியோ, நெஞ்சே ? - எனைத்தும்

சிறுவரையே ஆயினுஞ் செய்தநன் றல்லால்

உறுபயனோ இல்லை உயிர்க்கு.




ஏக்கி                            -  ஏங்கி
எனை                          -  எத்தனை
ஊழி                            -  காலம்
உறு                             -  உருப்படியான 




குடும்பத்தின் மீதான பாசத்தை கைவிடாதே. குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவைகளை நினைத்து ஏங்கி இன்னும் எத்தனை காலம் வாழப் போகிறாய், நெஞ்சே !! எத்தனை சிறியவையே ஆனாலும், அறச்செயல்கள் அன்றி உயிருக்கு வேறு வழியில் பயன் இல்லை.




Do not cut-off your family ties. How many years will you worry about your duties to your children? O mind ! However small it might be, without your deeds of charity, there's no gain for your soul.




No comments:

Post a Comment