Monday, 8 June 2015

கல்வி - 3

கல்வி - 3




களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;

கடைநிலத்தோர் ஆயினுங் கற்றறிந் தோரைத்

தலைநிலத்து வைக்கப் படும்.




களர்நிலம்       -  உவர்நிலம்
விழுமி            -  சிறந்தது
கடைநிலம்      -   தாழ்ந்த நிலை




உப்பு நிலத்தில் உற்பத்தி செய்த உப்பினை, சான்றோர்,  விளை நிலத்தின் நெல்லை விட மேலானதாக கொள்வர்; பிற்படுத்தப்பட்ட குடும்பத்தினர் ஆனாலும் கற்று அறிந்தோரை தலை சிறந்தவர்களாக மதிக்கப்  படுவார்கள்.




The excellent men consider the salt produced in the salty land to be better than the rice from fertile soil. The learned men from the backward communities would be treated better than those from the highest community.





No comments:

Post a Comment