Friday, 5 June 2015

தீவினையச்சம் - 7

தீவினையச்சம் - 7




யாஅ ரொருவர் ஒருவர்தம் முள்ளத்தைத்

தேருந் துணைமை உடையவர்? -  சாரல்

கனமணி நின்றிமைக்கு' நாட, கேண் ! - மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு.





யா                              -    யார்
தேரும்                        -    கேட்கும்
துணைமை                  -     சாதகம்
சாரல்                          -     மலைச் சரிவுகள்
மணி                           -     மாணிக்கம் 
இமைக்கும்                  -     ஒளிவிடும் 



யார் ஒருவர் மற்ற ஒருவரின் உள்ளத்தை அறியும் திறமை உடையவர்?
மலைச்சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாட்டின் அரசனே, கேள்! மக்களின் மனம்  வேறு, அவர்கள் செயல்கள் வேறு.




Which man has the ability to know the inmost self of other man? Lord of the land where heavy gems glitter on mountain slope, O hear ! - Men's minds are different from their deeds.

No comments:

Post a Comment